இலுப்பூர் எண்ணைமெய்யக்கவுண்டன்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள ஆசிரியர்களிடம் சில ஆலோசனைகளை அளித்த அவர் , அங்குள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்ட அவர், அரசு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற இப்போதிலிருந்தே நன்றாகப் படிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பின்னர் இலுப்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவியர்களின் சுதந்திர தின ஒத்திகையை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.