காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை திருவரங்குளம் அருகே ஆலங்குடி சாலையில் பெண்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை திருவரங்குளம் அருகே ஆலங்குடி சாலையில் பெண்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவரங்குளம் அருகேயுள்ள தேந்தாப்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக அழுக்கான தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இதைக் கண்டித்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் புதன்கிழமை காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆலங்குடி சாலையில் நடைபெற்ற  மறியலால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீஸார் பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com