குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இருவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் செந்தில்குமார் (44). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மது கடத்திய வழக்கில் ஆலங்குடி மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் செந்தில்குமாரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ், ஆட்சியருக்குப் பரிந்துரைத்தார். இதன்பேரில் செந்தில்குமாரைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி புதன்கிழமை உத்தரவிட்டார். இதேபோல இலுப்பூர் வட்டம் மேல கருப்பாடிபட்டியைச் சேர்ந்தவர் சங்கர் என்பவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.