புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்த இளைஞர்கள் தங்களது சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளார்.