மகளிர் குழுக்களுக்கு ரூ. 20.50 லட்சம் கடன்

பொன்னமராவதி அருகேயுள்ள அம்மன்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மகளிர் குழுவினருக்கு ரூ. 20.50 லட்சம்

பொன்னமராவதி அருகேயுள்ள அம்மன்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மகளிர் குழுவினருக்கு ரூ. 20.50 லட்சம் கடன் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் அ. பழனியப்பன் தலைமை வகித்து கல்லம்பட்டி அப்துல்கலாம் மகளிர் குழுவுக்கு ரூ. 4 லட்சம். அய்யனார் மகளிர் குழுவுக்கு ரூ. 5 லட்சம், முத்துமாரியம்மன் மகளிர் குழுவிற்கு ரூ. 5 லட்சம், அம்மன் மகளிர் குழுவிற்கு ரூ. 5 லட்சம், துர்க்கை அம்மன் மகளிர் குழுவிற்கு 1.50 லட்சம் என மொத்தம் 20.50 லட்சம் நபார்டு கடன் வழங்கினார். 
ஏற்பாடுகளை சங்கச் செயலர் அ. செல்வம், எழுத்தர் கற்புக்கரசி ஆகியோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com