புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் வெள்ளிக்கிழமை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
ஆலங்குடி கே.வி.எஸ் தெரு விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் பிரபு (45). கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை மாலை பாம்பு ஒன்று புகுந்தது.
தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள், வீட்டுக்குள் இருந்த சுமார் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.