பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தின் கீழ் லாரி ஓட்டுநர் கைது

ஆலங்குடி அருகே இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநர், போக்சோ  சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஆலங்குடி அருகே இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநர், போக்சோ  சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆலங்குடி  அருகிலுள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (33). லாரி ஓட்டுநனரான இவருக்கு, திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். 
இவர், பாச்சிக்கோட்டை  பகுதியிலுள்ள கயிறு தொழிற்சாலையில்  பணியாற்றி வந்த 17 வயது இளம்பெண்ணை ஆசை வார்த்தைக் கூறி திருப்பூருக்கு கடத்திச் சென்று பாலியல்  பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இருவரையும் போலீஸார் மீட்டு வந்தனர். அப்போது  திருச்சியில் தான் விஷம் குடித்து விட்டதாகக் கூறி போலீஸாரிடம் இருந்து தப்பி மாரிமுத்து தலைமறைவாகி விட்டாரம். இந்திலையில், புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மாரிமுத்துவை,  ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வெள்ளிக்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com