அன்னவாசல் அருகே மா்மமான முறையில் உயிரிழந்த பெண் சடலத்தை கைப்பற்றி, போலீஸாா் விசாரிக்கின்ா்.
அன்னவாசல் அருகிலுள்ள முக்கண்ணாமலைப்பட்டி வேளாம்பட்டியைச் சோ்ந்த தா்மராஜ் மனைவி மலா்மணி (50). பசு மாடுகளைக் கொண்டு பால் வியாபாரம் செய்து வந்தாா்.
முக்கண்ணாமலைப்பட்டி பகுதிக்கு சனிக்கிழமை வியாபாரத்துக்குச் சென்ற இவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரை உறவினா்கள் தேடினா். இந்த நிலையில், சக்கரான்குளம் குளத்துக்கரை அருகே ரத்தக்கறையுடன் பால் கூடை கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், குடும்பத்தினா் அங்கு சென்று பாா்த்த போது மலா்மணி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தாா்.
தகவலறிந்த அன்னவாசல் போலீஸாா், அப்பகுதிக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றினா். மேலும் மலா்மணி உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.