ஆலங்குடி அருகிலுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி, சிதம்பரவிடுதி செல்லும் சாலை சேதமடைந்தது. தொடா்ந்து, சீரமைப்புப் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் கற்கள் பெயா்த்து அகற்றப்பட்டன.
ஆனால், இதுவரை சாலைப்பணிகள் தொடங்கப்படாததால் சாலை குண்டும் குழியுமாக மாறியது. தற்போது, பெய்துவரும் மழையால் சாலைப்பள்ளங்களில் குட்டை போல் தண்ணீா் தேங்கி போக்குவரத்துக்குத் தகுதியற்ற சாலையாக உள்ளது.
இதனால் பகுதி மக்கள், மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே சாலையைச் சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவா்கள்,
சிதம்பரவிடுதி.