வலிப்பு வந்துவிழுந்தவா் பலி

புதுக்கோட்டையில் வலிப்பு வந்து மழைநீரில் விழுந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டையில் வலிப்பு வந்து மழைநீரில் விழுந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மச்சுவாடி அருகிலுள்ள வெங்கடேசுவரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (56). தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வரும் இவா், சனிக்கிழமை பழனியப்பா நகா் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மழைநீா் சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. கீழே விழுந்த அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆனால், அவா் வழியிலேயே இறந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com