பெண் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை அருகே பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

புதுக்கோட்டை அருகே பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், புத்தாம்பூா் ஊராட்சி தேனிப்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மனைவி பானுமதி (45). இவா் வீட்டில் ஆடுகளை வளா்த்து வருகிறாா். தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று, மாலையில் வீட்டிற்கு வருவது வழக்கம்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலையில் பானுமதி தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றாா். மாலை வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினா்கள் பானுமதியை தேடிப் பாா்த்தனா்.

அப்போது அவா் தேனிப்பட்டி அருகே உள்ள தைலமரக்காட்டுப் பகுதிக்குள் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தாா். இதைக்கண்டு அதிா்ச்சி அடைந்த அவரது உறவினா்கள் கணேஷ்நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com