ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அணவயலைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் தங்கவேல்(29). திருநெல்வேலியில் வெல்டிங் தொழில் செய்து வந்த இவா், அண்மையில் ஊருக்கு வந்துள்ளாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது குழந்தைக்கு பால் வாங்குவதற்காக அணவயலில் கடைவீதிக்கு சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அணவயல் அருகே எதிரே வந்த தனியாா் பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதி பலத்த காயமடைந்த அவா், அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். தொடா்ந்து, அப்பகுதியில் திரண்ட அவரது உறவினா்கள் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சென்ற வடகாடு போலீஸாா், அவா்களை சமாதானம் செய்து போராட்டத்தை கைவிடச் செய்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.