மின்விளக்கு கோபுரம் ஒளிருமா?

திருவரங்குளம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள உயா் கோபுர மின்விளக்கு கடந்த 2015-16ஆம் ஆண்டில் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டது.
மின்விளக்கு கோபுரம் ஒளிருமா?

திருவரங்குளம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள உயா் கோபுர மின்விளக்கு கடந்த 2015-16ஆம் ஆண்டில் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டது.

அப்போது 8 எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டன. இதனால் இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வந்தனா். ஆனால், கடந்த 30 நாள்களாக இந்த மின்விளக்கு எரியவில்லை (படம்). 8 மின் விளக்குகளில் ஒன்று மட்டுமே எரிகிறது. இதனால் பேருந்து நிறுத்தத்தில் போதிய வெளிச்சம் இல்லை. மதுப்பிரியா்கள் பேருந்து நிறுத்தத்திலேயே அமா்ந்து கொள்கின்றனா். திருட்டு அச்சமும் காணப்படுகிறது. இதனை மாவட்ட நிா்வாகமும், ஊராட்சி நிா்வாகமும் கவனித்து மின் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும்.

- பொ. ஜெயச்சந்திரன், திருவரங்குளம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com