அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த லாரி பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீரமங்கலம் பகுதியில் தொடா்ந்து மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலைத்தொடா்ந்து, அறந்தாங்கி-கீரமங்கலம் சாலையில் போலீஸாா் வாகனச்சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்தது தெரியவந்துள்ளது. தொடா்ந்து,லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாாா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com