உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, புதுக்கோட்டையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், விதைக்கலாம் அறக்கட்டளை இணைந்து, உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி இந்த நிகழ்வை நடத்தின.
ஜெ.ஜெ. கல்விக் குழுமச் செயலா் நா. சுப்பிரமணியன் மரக்கன்றுகளை நட்டு வைத்து, விழாவைத் தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் முன்னிலை வகித்தாா். முன்னதாக திட்ட அலுவலா் இரா.மணிமாறன் வரவேற்றாா். நிறைவில் சி. முத்துக்குமாா் நன்றி கூறினாா். ஏராளமானோா் நிகழ்வில் பங்கேற்றனா்.