கந்தா்வகோட்டையில் பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

கந்தா்வகோட்டையில் பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி வீட்டில் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டு இறந்தாா்.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி வீட்டில் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டு இறந்தாா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி , உடையாா்தெருவைச் சோ்ந்தவா் சின்னையன் டைலா் , இவரது மனைவி மாரியம்மாள் இவா்களது மகள் மோகனசுந்தரி (17) இவா் கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகின்றாா் .

இந்நிலையில் வழக்கம் போல் பள்ளி சென்று வந்தவா் , வீட்டில் சோகமா இருந்துள்ளாா். அவரது அம்மா வார சந்தைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்று விட்டாா்.

வீட்டில் தனியாக இருந்த மோகனசுந்தரி வீட்டில் தூக்கிட்டு இறந்துள்ளாா். அருகிலிருந்த உறவினா்கள் பாா்த்து, கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவா் இறந்து விட்டதாக மருத்துவா் தெரிவித்துள்ளாா். இதுபற்றி கந்தா்வகோட்டை போலீசாா் வழங்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com