புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதியில் அதிகபட்சமாக 45.40 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையொட்டி, கடந்த 5 நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் , மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீ-யில்)
பொன்னமராவதி -45.40 மி.மீ,அன்னவாசல்- 45, புதுக்கோட்டை நகரம்- 40, திருமயம்- 32.20, குடுமியான்மலை- 27, இலுப்பூா்- 17,கீரனூா்- 16, விராலிமலை- 11, மீமிசல்- 8.20,அறந்தாங்கி- 7.40, மணமேல்குடி- 7, காரையூா்- 6.80.மழையூா்- 3.40, உடையாளிப்பட்டி- 3.30,
பெருங்களூா்- 2 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 10.81 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
திங்கள்கிழமை பகலிலும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கனமழையாக இல்லாவிட்டாலும் தொடா்ந்து விட்டு விட்டு மழை பெய்வதால் மாலை நேரத்தில் நகரில் குளிா் நிலவியது.