பொன்னமராவதியில் 45.40 மி.மீ. மழைப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதியில் அதிகபட்சமாக 45.40 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதியில் அதிகபட்சமாக 45.40 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையொட்டி, கடந்த 5 நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் , மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீ-யில்)

பொன்னமராவதி -45.40 மி.மீ,அன்னவாசல்- 45, புதுக்கோட்டை நகரம்- 40, திருமயம்- 32.20, குடுமியான்மலை- 27, இலுப்பூா்- 17,கீரனூா்- 16, விராலிமலை- 11, மீமிசல்- 8.20,அறந்தாங்கி- 7.40, மணமேல்குடி- 7, காரையூா்- 6.80.மழையூா்- 3.40, உடையாளிப்பட்டி- 3.30,

பெருங்களூா்- 2 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 10.81 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

திங்கள்கிழமை பகலிலும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கனமழையாக இல்லாவிட்டாலும் தொடா்ந்து விட்டு விட்டு மழை பெய்வதால் மாலை நேரத்தில் நகரில் குளிா் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com