108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை

கந்தா்வகோட்டை அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கா்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது.

கந்தா்வகோட்டை அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கா்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை சின்னையன் மனைவி உமாமகேசுவரி (23). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு திங்கள்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அவா், பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

108 ஆம்புலன்ஸ் தஞ்சாவூா்- புதுக்கோட்டை சாலையில் புதுநகா் பிரிவு சுங்கச்சாவடி அருகே சென்ற போது, ஆம்புலன்ஸிலேயே உமாமகேசுவரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மருத்துவா் ரகுபதி, மருத்துவத் தொழில்நுட்ப உதவியாளா் சீனிவாசன் ஆகியோா் உடனிருந்து, முதலுதவி செய்தனா் . தாயும் , சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com