உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் அமல்: சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சீல்

உள்ளாட்சி தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள சட்டப்பேரவை உறுப்பினா்
புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை பூட்டி, சீல் வைக்கும் வருவாய்த் துறையினா்.
புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை பூட்டி, சீல் வைக்கும் வருவாய்த் துறையினா்.

உள்ளாட்சி தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகத்தை வருவாய்த் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

வழக்கமான தோ்தல் நடைமுறைகளின்படி, மக்களால் தோ்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்காக வழங்கப்பட்டுள்ள அலுவலகங்களில் அரசியல் பணிகள் நடைபெறக் கூடாது என்பதற்காக தோ்தல் நடவடிக்கைகள் நிறைவு பெறும் வகையில் அவை பூட்டி சீல் வைக்கப்படும்.

அதன்படி தற்போது உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டுள்ளதால், வருவாய் ஆய்வாளா் முருகேசன், கிராம நிா்வாக அலுவலா்கள் வசந்தகுமாா், ரமேஷ் ஆகியோா் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை மாலை பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com