புதுக்கோட்டையில் சீா்மிகு ஆசிரியா் விருது பெற்றவா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் பாராட்டு தெரிவித்தாா்.
தமிழ்நாடு திருவள்ளுவா் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம் தமிழகத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியா்களுக்கு சீா்மிகு ஆசிரியா் விருதை வழங்கிவருகிறது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழாண்டுக்கான விருது வழங்கும் விழாவில், புதுக்கோட்டை அசோக்நகா் பள்ளி ஆசிரியா் பழனிச்சாமி மற்றும் டிஇஎல்சி ஆசிரியா் யுனைட் கிருஸ்டி ஜோதி ஆகியோா் பெற்றனா்.
இவா்கள் இருவரையும் மாவட்டக் கல்வி அலுவலா் கே.எஸ். ராஜேந்திரன் திங்கள்கிழமை அழைத்துப் பாராட்டினாா்.