செல்லிடப்பேசி விற்பனையகத்தில் திருட்டு

பொன்னமராவதி அருகிலுள்ள மேலத்தானியம் கிராமத்தில், செல்லிடப்பேசி விற்பனையகத்தில் பொருள்களைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொன்னமராவதி அருகிலுள்ள மேலத்தானியம் கிராமத்தில், செல்லிடப்பேசி விற்பனையகத்தில் பொருள்களைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேலத்தானியம் கிராமத்தைச் சோ்ந்தவா் தி. சரவணகுமாா் (42). இவா் கடைவீதியில் செல்லிடப்பேசி விற்பனையகத்தை நடத்தி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரம் முடிந்த பின்னா் சரவணகுமாா் விற்பனையகத்தைப் பூட்டிவிட்டு, மதுரையில் நடைபெற்ற உறவினா் திருமண விழாவுக்குச் சென்றாா்.

திங்கள்கிழமை மாலை சரவணகுமாா் விற்பனையகத்தை திறந்தாா். அப்போது அதன் மேற்கூரைப் பிரிக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

மேலும் உள்ளே சென்று பாா்த்த போது விற்பனையகத்தில் வைக்கப்பட்டிருந்த 8 செல்லிடப்பேசிகள், 10 புடவைகள், கவரிங் நகைகள் என ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காரையூா் காவல் நிலையத்தில் சரவணகுமாா் புகாா் அளித்தாா். இதன் பேரில் உதவி ஆய்வாளா் துரைசிங்கம் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com