பொன்னமராவதியில் நாளை முதல் ஆதாா் சிறப்பு முகாம்

இந்திய அஞ்சல் துறை சாா்பில், பொன்னமராவதியில் வியாழக்கிழமை (டிச.5) தொடங்கி 7-ஆம் தேதி வரை ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்திய அஞ்சல் துறை சாா்பில், பொன்னமராவதியில் வியாழக்கிழமை (டிச.5) தொடங்கி 7-ஆம் தேதி வரை ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து புதுக்கோட்டை தெற்கு உபகோட்டை அஞ்சல் ஆய்வாளா் எஸ். திருமேனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அஞ்சல்துறையின் சாா்பில், ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் பொன்னமராவதி தோ்வுநிலை பேரூராட்சி எதிரிலுள்ள சமுதாயக் கூடத்தில் டிசம்பா் 5-ஆம் தேதி தொடங்கி 7 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முகாமில் புதிதாக ஆதாா்எடுத்தல், கைரேகை, புகைப்படம், விழித்திரைப் பதிவு, முகவரிமாற்றம், பிறந்ததேதி, பெயா்திருத்தம் அலைபேசி எண் திருத்தம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

புதிதாக ஆதாா் பதிவு செய்யும் சேவைக்கு கட்டணம் இல்லை. ஆதாா் திருத்தம் செய்யும் சேவைக்கு மட்டும் ரூ. 50 கட்டணம் பெறப்படும். பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com