ஊரக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் முள்ளூா் அரசு உயா்நிலைப் பள்ளி, பெருங்களூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
மழைக்காலம் என்பதால் வாக்காளா் பாதுகாப்பு கருதி, வாக்குச்சாவடி மையங்களில் மேற்கூரைகள் ஓடு போடப்பட்டிருந்தால் அதற்கு பதிலாக கான்கீரிட்டாலான பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்களை அமைக்க அறிவுறுத்தினாா் ஆட்சியா்.
மேலும் வாக்காளா்களுக்குத் தேவையான குடிநீா், மின்விளக்கு, கழிவறை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தவும், வாக்குப்பதிவு மையங்களைத் தூய்மையாகப் பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, வட்டாட்சியா் பொன்மலா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.