தொடா் மழையால், புதுக்கோட்டை நகரில் வீடு இடிந்து விழுந்ததில் ஆடு உயிரிழந்தது.
வடகிழக்குப் பருவமழையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை நகரில் 5-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமையும் விட்டு விட்டு மழை பெய்தது. நகரில் பேருந்து நிலையப் பகுதி, பெரியாா் நகா் பகுதிகளில் மழை நீா் சாலைகளில் ஓடியது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உத்தரவிட்டிருந்தாா்.
இந் நிலையில் புதுக்கோட்டை போஸ் நகா் 4-ஆம் வீதியில் கருப்பையா மனைவி ராக்கம்மாளுக்கு சொந்தமான ஓட்டு வீடு மழையால் இடிந்து விழுந்தது. இதில் வீட்டிலிருந்த ஓா் ஆடு உயிரிழந்தது.