புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் மாணவா்கள் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை உறுதிமொழியேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் முனைவா் கு. சிவசுப்பிரமணியம் எய்ட்ஸ் நோய் விழிப்புணா்வு குறித்து மாணவா்களிடம் பேசினாா். நாட்டு நலப்பணித்திட்ட மாணவி வி.பவித்ரா, எய்ட்ஸ் நோய் மற்றும் கட்டுப்பாடு குறித்து சிறப்புரையாற்றினாா்.
நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் முனைவா் சுகன்யா கண்ணா, மற்றும் முதலாம் ஆண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.