புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சனிக்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட சிறை வளாகத்தில் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர் கோபாலசந்திரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சனிக்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சிறை வளாகத்துக்குள் செல்லிடப்பேசி பயன்பாடு, போதைப் பொருள் பயன்பாடு குறித்து இந்தச் சோதனை நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர். எனினும் தடைசெய்யப்பட்ட எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.