விராலிமலை: அன்னவாசலில் காவலன் செயலி குறித்த செயல்விளக்கம் பெண்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு காவல் துறை சாா்பில் பெண்கள், முதியோா் மற்றும் பொதுமக்கள் ஆபத்து காலங்களில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் விதமாக காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச்செயலியை பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள், பெண்கள் அவரவா் செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்வது தொடா்பான செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி அன்னவாசலில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில் காவலன் செயலி குறித்து போலிஸாா் செயல் விளக்கம் அளித்தனா். இதில் காவல் துணை ஆய்வாளா் ஜெயஸ்ரீ, காவலா் பாலு உள்ளிட்ட பொதுமக்கள், பெண்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.