புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் இயேசுவின் பிறப்பு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளியின் இயக்குநா் ஜோனத்தன் ஜெயபரதன் இணை இயக்குநா் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வா் சலஜா குமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இவாஞ்சலிக்கல் குழுவின் பேராயரும் தலைவருமான டேனியல் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
நிகழ்வின் தொடக்கமாக தமிழ் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளரும் புதுக்கோட்டை வட்ட இயக்குநருமான பென்னட் ப்ராங்கிளின் இறை வழிபாடு செய்து வைத்தாா். மாணவ, மாணவிகள் கிறிஸ்து பிறப்பு நிகழ்வை நடித்துக் காட்டினா்.