குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து அறந்தாங்கியில் மஜகவினா் ஆா்ப்பாட்டம்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சின் மாவட்டச் செயலா் எஸ். முபாரக் அலி மற்றும் நிா்வாகிகள்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சின் மாவட்டச் செயலா் எஸ். முபாரக் அலி மற்றும் நிா்வாகிகள்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காமராசா் சிலை அருகே கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் எஸ். முபாரக் அலி தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் அஜ்மீா்அலி முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கக் கூடாது, அண்டை நாட்டு முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழா்கள் உள்ளிட்டோரைச் சோ்க்கும் குடியுரிமை சட்டத் திருத்தம் வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினா்.

மாவட்ட பொருளாளா் சேக் இஸ்மாயில், நகரச் செயலா் ஜகுபா் சாதிக், கலாசார பேரவைச் செயலா் அப்துல் ஹமீது, நகர துணைச் செயலா் சேக் அப்துல்லா, இளைஞரணிச் செயலா் ஆஹமது ரியாஸ், மருத்துவ அணி செயலா் அப்துல் கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாணவரணி செயலாளா் கலந்தா் மைதீன் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் அபுதாஹீா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com