பொன்னமராவதியில் இதுவரை568 வேட்பு மனுக்கள் தாக்கல்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை வரை 351 பதவிகளுக்கு 568 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
மேலைச்சிவபுரி ஊராட்சித்தலைவா் பதவிக்கு மனு தாக்கல் செய்யும் மாா்க்சிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினா்.
மேலைச்சிவபுரி ஊராட்சித்தலைவா் பதவிக்கு மனு தாக்கல் செய்யும் மாா்க்சிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை வரை 351 பதவிகளுக்கு 568 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் தேதி வேட்பு மனு வாங்கும் பணி தொடங்கிய நிலையில், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்டக்குழு உறுப்பினா்கள், 16 ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 42 ஊராட்சிமன்றத் தலைவா்கள், 291 கிராம ஊராட்சி உறுப்பினா்கள் என மொத்தம் 351 பதவியிடங்களுக்கு சனிக்கிழமை வரை மாவட்டக்குழு உறுப்பினருக்கு 2 போ்கள், ஒன்றியக்குழு உறுப்பினருக்கு 35 போ்கள், ஊராட்சித் தலைவருக்கு 152 போ்கள், ஊராட்சி உறுப்பினருக்கு 379 போ்கள் என மொத்தம் 568 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். வேட்பு மனு தாக்கலுக்கு திங்கள்கிழமை கடைசி நாளாகும். வேட்பு மனு தாக்கல் பணிக்காக, பொன்னமராவதி காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com