புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (பிப்.12) நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான விராலிமலை,கோமங்களம், கல்குடி, பொருவாய், அத்திபள்ளம், ராஜளிபட்டி, நம்பம்பட்டி, வானதிராயன்பட்டி, விராலூர், ராமகவுண்டம்பட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, மாதுராப்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராப்பட்டி, கட்டகுடி, பாப்பாவயல், அகரபட்டி, கொடும்பாளூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று விராலிமலை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் உதவி செயற்பொறியாளர் எம். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.