புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெரும் கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், சேந்தன்குடி, வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், பனங்குளம், நகரம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின் உள்ளிட்ட பகுதியில் வியாழக்கிழமை(பிப்.14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கீரமங்கலம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.