விராலிமலை அருகே திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விராலிமலை அருகேயுள்ள குன்னத்தூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் கருணாகரன்(25). தனியார் தொழிற்சாலை ஊழியரான இவர், கடந்த திங்கள்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை - திருச்சி சாலை சுங்கச்சாவடி அருகே முன்னால் சென்ற லாரியைக் கடக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கருணாகரன் மீது லாரி மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து லாரி ஓட்டுநர் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சின்னத்துரையை (33) கைது செய்து விசாரிக்கின்றனர்.