புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் பிப். 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளதால், 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்த புதுக்கோட்டையைச் சேர்ந்த வேலைதேடுபவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.