அன்னவாசல் அருகே பதாகைக்கு தீ வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே புதுமனை புகுவிழா மற்றும்  காதணி விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே புதுமனை புகுவிழா மற்றும்  காதணி விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகைக்கு  அடையாளம் தெரியாதவர்கள் தீ வைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னவாசல் அருகிலுள்ள பரம்பூர் கல்லம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கட்டிய புதுவீட்டின் புதுமனை புகுவிழா மற்றும் மகன்களுக்கான காதணி விழாவை கடந்த 10 ஆம் தேதி நடத்தியுள்ளார்.
இதற்காக பரம்பூர் பேருந்து நிறுத்தம் அருகே உறவினர்கள், நண்பர்களின் புகைப்படங்களுடன் கூடிய வரவேற்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இப்பதாகைக்கு யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துச் சென்றனர். 
இதுகுறித்து தகவலறிந்த அன்னவாசல் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தீ வைப்பு குறித்த தகவலறிந்து புதன்கிழமை பரம்பூர் கடைவீதியில் சுப்பிரமணியனின் உறவினர்கள், நண்பர்கள் கூடினர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸார் பேருந்து நிலையம், கடைவீதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com