அறந்தாங்கி, கீரமங்கலம் பகுதிகளில் பிப்ரவரி 14 மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக அறந்தாங்கி, கீரமங்கலம்   பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்.14) மின்தடைசெய்யப்படுகிறது.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக அறந்தாங்கி, கீரமங்கலம்   பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்.14) மின்தடைசெய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளர்கள் அறந்தாங்கி கி. பழனிவேல், கீரமங்கலம் அ. சுப்பிரமணியன்  புதன்கிழமை தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அறந்தாங்கி, ஆவணத்தான்கோட்டை, மறமடக்கி, நாகுடி துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 
 இதனால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும்  அறந்தாங்கி நகர், தொழிற்சாலை, தாந்தாணி, சிலட்டூர், தேனிப்பட்டி,   பெரியாலூர், குளமங்களம், மறமடக்கி, திருநாளுர்,   பெரும் வல்லவாரி, சுப்பிரமணியபுரம், அரசர்குளம், பெருங்காடு, மேல்மங்கலம், நாகுடி, தொண்டைமானேந்தல், அத்தாணி, கட்டுமாவடி மற்றும் வேட்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கீரமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும்  கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், எல்.என்.புரம், சேந்தன்குடி, வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை பனங்குளம் நகரம், செரியாலூர் ஜெமீன் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com