புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை பெற்று வருவோருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலம் மற்றும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. அரசுத் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கவுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவித்தொகை பெற்று வரும் வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் அழைப்புவிடுத்துள்ளார்.