புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் பண்ணை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வர் கு.சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், பண்ணைத் தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்து சமத்துவப் பொங்கல் வைத்தனர். முன்னதாக பேராசிரியர்கள், மாணவர்கள், பண்ணைத் தொழிலாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மாணவ மன்ற ஆலோசகர் ஆ. குருசாமி மற்றும் இணை மாணவ மன்ற ஆலோசகர் இரா. கலையரசு, பண்ணை மேலாளர் அ. ஆண்டர்சன் அமலன்குமார் ஆகியோர் வழி நடத்தினர்.