வலையபட்டி சிதம்பரம் பள்ளியில் பொங்கல் விழா

பொன்னமராவதி  வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி  வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் நிர்வாக இயக்குநர் விஎஸ்டி.பிஎல். சிதம்பரம் தலைமைவகித்தார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள்,  ஆசிரியர்கள் பொங்கலிட்டனர். மேலும் தமிழர் பாரம்பரியம் விளக்கும் வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம்,பறையாட்டம் உள்ளிட்ட  நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் முதல்வர் வெ. முருகேசன், தனி அலுவலர் நெ. ராமச்சந்திரன், துணை முதல்வர்கள் வைதேகி, கலைமதி மற்றும் ஆசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com