மெளண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி மாணவிகள் கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில், மூன்றாம் இடத்தைப் பிடித்தனர்.
கணினி அறிவியல் துறை மாணவிகளானஎஸ். சிவகாமசுந்தரி, எஸ். காவ்யா ஆகியோர் சிறந்த தொழில்நுட்பக் காட்சியை அமைத்திருந்ததற்காக மூன்றாம் இடம் பிடித்தனர்.
மாணவிகளை கல்லூரியின் தலைவர் ஜெயபாரதன் செல்லப்பா, துணைத் தலைவர் ப்ளோரன்ஸ் ஜெயபாரதன், இயக்குநர் ஜெய்சன் ஜெயபாரதன், கல்வி ஒருங்கிணைப்பாளர் விவியன் ஜெய்சன், முதல்வர் பி. பாலமுருகன், கணினி அறிவியல் துறைத் தலைவர் டி. இளவரசி ஆகியோர் பாராட்டினர்.