விவேகானந்தரின் பிறந்த நாள் விழா

அறந்தாங்கி ஜீவா நகரில் சுவாமி விவேகானந்தரின் 156 ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்ட


அறந்தாங்கி ஜீவா நகரில் சுவாமி விவேகானந்தரின் 156 ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஆவுடையார்கோவில் ராஜா விவேகானந்தர் கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளை, ஜீவா நகர் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து நடத்திய தேசிய இளைஞர் தின விழா நிகழ்வுக்கு ஜீவா நகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார்.
அறந்தாங்கி பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவாலயாவின் செயலாளர் கே.சி.இளையபாரதி சுவாமி விவேகானந்தர் படத்துக்கு மாலை அணிவித்து மகளிருக்கு சேலை மற்றும் குழந்தைகளுக்கு புத்தகம் மற்றும் எழுது பொருள்களை வழங்கி சுவாமி விவேகானந்தர் குறித்து விளக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பொன்னையா, யோகானந்தன், ஆறுமுகம் மற்றும் பலர் பேசினர். 
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் விவேகானந்தரின் பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தின விழாவாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மருத்துவர்.எம்.எஸ்.செல்வராஜ் தலைமையில் நடந்தது.
விவேகானந்தரின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். 
நிகழ்ச்சியில் முத்து, பாமக மாவட்ட செயலாளர் முத்துகுமார், பா.ஜ.க ஒன்றிய தலைவர் தவமணி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com