கோவனூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு

பொன்னமராவதி அருகே உள்ள கோவனூர் கிராமத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே உள்ள கோவனூர் கிராமத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு புதன்கிழமை நடைபெற்றது.  ஊர்ப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 500-க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன. 
அக்காளைகளை மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள் அடக்கினர். களத்தில் நின்று விளையாடிய காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் குக்கர், மிக்ஸி, உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். முன்னதாக ஊரில் உள்ள அனைத்து கிராம தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com