விராலிமலை அருகே அனுமதியின்றி மது விற்ற 4 பேரை விராலிமலை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை பகுதிகளில் விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் சுமையாபானு தலைமையில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது விராலிமலை அருண்கார்டன் பகுதி உணவகத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சுப்பையா மகன் நல்லு (57), ரங்கசாமி மகன் கலைச்செல்வன் (42), பெருமான் மகன் அண்ணாதுரை (50) புதிய பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடையில் மது பதுக்கி விற்ற சுப்பையா மகன் சண்முகம் (56) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.