புதுக்கோட்டை
பொங்கலையொட்டி இறைச்சி, மீன் வகை விற்பனை அதிகரிப்பு
கந்தர்வகோட்டையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுகறி , மீன் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
கந்தர்வகோட்டையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுகறி , மீன் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் பொங்கல்வைத்து வழிபட்டு, தொடர்ந்து தங்களது முன்னோரை வழிபடும் வீட்டு சாமி வழிபாடு செய்வர். இதில் மீன், ஆட்டுக்கறி , முட்டை வைத்து படையல் செய்வர்.
இந்நிலையில் கந்தர்வகோட்டையில் வியாழக்கிழமை மீன் , ஆட்டுக்கறி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. மக்கள் கூட்டம் அலைமோதியது. கடல் மீன் வரத்து சரிவால் மீன்களின் விலை அதிகமாக இருந்தது. இதேபோல் கஜா புயலால் ஆடுகள் பல இறந்ததால் ஆட்டுக்கறி விலையும் உயர்ந்தது. இருந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.