பொங்கலையொட்டி இறைச்சி, மீன் வகை விற்பனை அதிகரிப்பு

கந்தர்வகோட்டையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுகறி , மீன் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

கந்தர்வகோட்டையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுகறி , மீன் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் பொங்கல்வைத்து வழிபட்டு, தொடர்ந்து தங்களது முன்னோரை வழிபடும் வீட்டு சாமி வழிபாடு செய்வர். இதில் மீன், ஆட்டுக்கறி , முட்டை வைத்து படையல் செய்வர்.
இந்நிலையில் கந்தர்வகோட்டையில் வியாழக்கிழமை மீன் , ஆட்டுக்கறி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.  மக்கள் கூட்டம் அலைமோதியது. கடல் மீன் வரத்து சரிவால் மீன்களின் விலை அதிகமாக இருந்தது. இதேபோல் கஜா புயலால்  ஆடுகள் பல இறந்ததால் ஆட்டுக்கறி விலையும் உயர்ந்தது.  இருந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com