திமுக ஊராட்சி சபைக் கூட்டம்
By DIN | Published On : 24th January 2019 11:18 AM | Last Updated : 24th January 2019 11:18 AM | அ+அ அ- |

கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தங்கரைவிடுதி, துவார், மட்டாங்கால், அக்கச்சிப்டட்டி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் திமுக ஊராட்சி கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.பரமசிவம் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட கழகப் பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் டி.பி. சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
இதில், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் எம். ராஜேந்திரன், என்.ஜானகிராமன், முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் எம்.ராஜா நன்றி கூறினார்.