கபடிப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் கபடிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் கபடிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 22 அணியினர் பங்கேற்று விளையாடினர். 
முதல் பரிசை மதியாணி அணியினரும், இரண்டாம் பரிசை குரும்பப்பட்டி அணியினரும், மூன்றாம் பரிசினை தெக்கூர் அணியினரும், நான்காம் பரிசினை முள்ளிப்பட்டி அணியினரும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அணியினர்க்கு ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகக் கண்டு மகிழ்ந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com