பொன்னமராவதியில் உள்ள அரசு பாப்பாயி மருத்துவமனையில், மருத்துவர் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பொன்னமராவதி சிட்டி அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மருத்துவ அலுவலர் செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். விழாவில் மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதேபோல, ராயல் அரிமா சங்கத்தினரும் மருத்துவர் தின விழாவை கொண்டாடினர். சங்கத்தலைவர் விஜயரெங்கன் தலைமை வகித்தார். விழாவில்
பொன்னமராவதி பகுதியில் உள்ள மருத்துவர்கள் பலருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.