புதுக்கோட் டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் பணியில் இருந்த மேலாளர் மாரடைப்பு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் கனகராஜ்(58). இவர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் உள்ள வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இந்த வங்கியின் கறம்பக்குடி கிளைக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பணியிடமாறுதல் பெற்று வந்து கனகராஜ் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமை தனது அறையில் அலுவலக பணியைக் கவனித்துக் கொண்டிருந்த கனகராஜூக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வங்கி ஊழியர்கள், கனகராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், கனகராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.