புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட் டுறவு வங்கி விராலிமலை கிளையின் சார்பில் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா விராலிமலை வங்கி கிளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மேலாண்மை இயக்குநர் ந. மிருனாளினி, கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவர் ஆர். சின்னத்தம்பி தலைமை வகித்தார். மேலாளர் எம். சீனிவாசன் வரவேற்றார். இதில் 5 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் கடன் தொகை காசோலையாக வழங்கப்பட்டது. விழாவில் முதன்மை வருவாய் அலுவலர் எம். சுல்தான்மைதீன், எஸ். சிவசுப்பிரமணியன், எஸ். ரவிசந்திரன், ஜி. முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.