புதுக்கோட்டை மாவட்ட மழை பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், காரையூரில்  அதிகபட்சமாக 29 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், காரையூரில்  அதிகபட்சமாக 29 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாம் நாளாக வெள்ளிக்கிழமை மாலை மற்றும் இரவில் சில பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவின் விவரம் (மி.மீ.-இல்) பெருங்களூர்- 6, புதுக்கோட்டை- 5, ஆலங்குடி- 2.60, கந்தர்வகோட்டை- 1, கறம்பகுடி- 2.20, மழையூர்- 2.80, திருமயம்- 9.20, அரிமளம்- 9, குடுமியான்மலை- 15, அன்னவாசல்- 9, காரையூர்- 29.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com